# நூலறுந்த பட்டமொன்று
தரையிறங்கியது....
காற்றின் திசையறியாது !
===========================
# கருவேலமுள் குத்தினாலும்
நன்றாகவேச் சுழன்றது...
பனையோலைக் காற்றாடிகள் !
===========================
# பசுமை வயலோடு உறவாடும்
தேய்ந்த பாதைகளில்...
இரட்டை மாட்டு வண்டிகள் !
===========================
# மருதநில மாலை இசை
வீடுதிரும்பும் காளைகளின்...
கழுத்து மணியோசை !
===========================
# உயிர்மெய் எழுத்துக்களாய்
வாழ்வியலின் மொழியில்...
விவசாய விளைநிலங்கள் !
===========================
# மனிதநேய உரையாடல்களில்
மகுடம் சூட்டிக்கொண்டன...
கிராமத்துத் திண்ணைகள் !
===========================
# எனக்கு சிலப்பதிகாரமும்
மணிமேகலையும் வேண்டாம்...
அமுதசுரபி மட்டுமே போதும் !
===========================
கா.ந.கல்யாணசுந்தரம்