எம்மைப் பற்றி

வணக்கம்,
     தங்கள் வருகைக்கு நன்றி. இணையத்தளமூடாகவும் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. ஈழத்து இலக்கியச்சூழலில் கவிதை என்ற தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஓரிரு சிற்றிதழ் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டு செயற்பlட்ட கவிஞன் இணையத்தினூடாக சர்வதேச இதழாக உங்கள் முன் விரிகின்றது.
        கடந்த காலங்களில் மாதமொரு இதழாக மலர்ந்த கவிஞன் தற்போது காலாண்டிதழாக புதிய பரிமானமெடுத்து தனது 25 இதழ்களை உதிர்த்துள்ளது. இதற்குள் உங்களைப்போன்ற வாசர்களின் பங்களிப்பு மறைந்துள்ளதை மறுக்கவோ மறைக்கவோ மறக்கவோ முடியாது.

       தொடர்ந்தும் கவிஞன் பயணிக்கும் பாதையில் நீங்களும் பங்குபற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில். நாம் பயணிக்கின்றோம். குறைகளை எமக்கு அறிவியுங்கள் நாம் திருத்திக்கொள்கின்றோம். உங்கள் வருகையை கருத்துத் தெரிவிப்பதன் மூலம் உறுதிப்படுத்துங்கள் அது எங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்.
    உங்கள் கவிதைகளை, விமர்சனங்களை அல்லது கவிதை சம்பந்தமான ஆக்கங்களை தபால் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ எமக்கு அனுப்பி வையுங்கள்.  நிச்சயமாக அது பிரசுரிக்கப்படும். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க நாம் தயாராக இருக்கிறோம்.
இப்படிக்கு

என்றென்றும் அன்புடன்

சதாசிவம் மதன்




கூட்டுறவுக்கடை வீதி,
புதுக்குடியிருப்பு - கீ.மா,
மட்டக்களப்பு,
இலங்கை.

தொலைபேசி இல : 0094 77 3620328
மின்னஞ்சல் : kavignan@live.com அல்லது msmathan@gmail.com