மரபுக்குள் புதையும் வாழ்வு

வாழ்க்கை வாழப்படுவதற்கே….!
யதார்த்தங்களின் மத்தியில்
மதியின்றி மயங்கிக்கிடக்கும் பெண்ணின் புலம்பல் இது…!!
உன்னதமான உறவுகளால்
அணைக்கப்பட்டு விடுபடப்பட்ட
இளைய இதயத்தின் துடிப்பு இது..!!
மரபுகளின் வழியில் பயணிக்கும் போது
பாதை மாறத் தெரியாத குழந்தையின் கதறல் இது..!!
அழுத்தங்களுக்கு ஆசைகளை பலி கொடுத்து
அழுந்தி நிற்கும் மனதின் ஏக்கம் இது..!!
வரம்புகளின் போர்வையுள் சுருண்டு கிடக்கிறேன்…!!!!
என் வாழ்க்கை தேடப்பட வேண்டும்…!!
– பிரனு ஜானு -