மழலை பாடும் மனை….















மழலைகள் இல்லா மனையோ!
மகிழ்ச்சி மண்டிக் கிடக்குமடவி
கவலைகள் கொல்லும் இருப்போ
கண்மணி கண்டிலார் பாழ்வீடே

மழலைச் சிரிப்பில் இறைவன்
மனதைப் பறிக்கும் அழகு
கவலை போக்கும் எல்லை
கட்டிக் கொஞ்சும் பிள்ளை

பொருளாய்த் தேடும் செல்வம்
இருளைக் காணும் மனதில்
வரவாய் ஆன அரிய தனமோ
வரமாய் வந்த வாரிசாயிடுமே

குரலோ இன்னிசையின் கீதம்
குணமோ அருட்கடவுளிள் வாசம்
அருளாய் ஆன அருமை செல்வம்
புரளும் புக்கில் மா ஆலயமே!

வில்லூரான்