போதை யுலக மெங்கள்
பாதை மாற்றும் கேளடா
வாதை வந்து மெய்யிலே
வதைகள் செய்யும் கேளடா
தீதாம் போதை யென்றுமே
தீராத நோய்கள் தந்திடும்
பாதகம் செய்து வாழ்வைப்
பாலை வனமா யாக்கிடும்
புத்தி மந்தம் ஆக்கிடும்
புகைச்சல் கண்ணிற் தோன்றும்
சக்தி குன்றி யுடலிலே
சகல நோய்களும் தொற்றும்
காத்து வைக்கும் ஈரலும்
கழிவை யகற்று மங்கமும்
செத்து மெல்லச் சிதைந்தே
சீவன் தன்னை எடுத்திடும்
குடும்ப மானமும் போக்கியே
கோட்டி லெம்மை நிறுத்திடும்
இடுக்கன் தோன்றி வாழ்விலே
இளமை முதுமை ஆகிடும்
மிடிமை தோன்றி வாழ்விலே
மீளாத் துயரைத் தந்திடும்
அடிமை நம்மை ஆக்கியே
அடவி கொண்டு சேர்த்திடும்
-வில்லூர் பாரதி-
0 கருத்துகள்