செந்தணல் வெளியீட்டகத்தின் 15 வது மாபெரும் வெளியீடாக வெளிவந்த செ. கஜானன் எழுதிய " கனவுகளின் புலர்வு " கவிதை நூல் வெளியீடு 15.10.2015 வியாழக்கிழமை பளை கூட்டுறவு மண்டபத்தில் பி.ப 2.30 மணிக்கு வவுனியா தமிழ்ச்சங்க செயலாளர் தமிழருவி த. சிவகுமாரன் அவர்கள் தலைமையில் ஆரம்பமானது .
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். ஆசியுரைகளை புலோப்பளை புனித இராயப்பர் ஆலய பங்குத்தந்தை அ. சில்வென்றர்தாஸ் , பச்சிலைப்பள்ளி அறத்தி அம்பாள் திருக்கோயில் பிரதமகுரு சிவஸ்ரீ ந. பிரபாகரக்குருக்கள் , வவுனியா தமிழ்ச்சங்க தலைவர் எஸ். என். ஜீ . நாதன் ஆகியோர் நிகழ்த்தினார்கள் .
-வாழ்த்துரைகளை பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன் , பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ப. ஜெயராணி, தமிழகத்தில் இருந்து வருகைதந்த இலக்கியவாதி திரு. வெள்ளைச்சாமி ஐயா ஆகியோர் நிகழ்த்தினர்.
-சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப. அரியரத்தினம் , பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ப. ஜெயராணி ஆகியோர் சிறப்பித்தனர
-கௌரவ விருந்தினர்களாக கிளி / பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அ. கேதீஸ்வரன் , , பளை றோமன் கத்தோலிக்க பாடசாலை முன்னாள் அதிபர் திருமதி இ. குமாரவேலு ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர
-அறிமுக உரையினை செந்தணல் வெளியீட்டக இயக்குனரும் "காவியப்பிரதீபா , தமிழ்ச்சுடர் வன்னியூர் செந்தூரன் நிகழ்த்தினார் .
-நூலாசிரியர் அறிமுகத்தினை அதிபர் திருமதி இ. குமாரவேலு அவர்கள் நிகழ்த்தினார
-வெளியீட்டுரையினை தாய்தேச கலைஞர்கள் அமைப்பின் செயலாளர் கவிச்சுடர் சிவரமணி நிகழ்த்தினார
-நூல் வெளியீட்டினை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அவர்கள் வெளியிட்டு வைக்க பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ப. ஜெயராணி அவர்கள் பெற்றுக்கொண்டார். - நூல் ஆய்வுரையினை தமிழ்மணி மேளிக்குமரன் நிகழ்த்தினார் - விருந்தினர்களின் சிறப்புரைகள் தொடர்ந்து நூலாசிரியர் கஜானனனின் ஏற்புரையுடன் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது .

தொகுப்பு
கவிஞர்.த.ரூபன்
திருகோணமலை.